/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
/
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 'அம்மா' உணவகம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 08, 2024 05:27 AM
கரூர் : கரூர் அரசு மருத்துவ கல்லுாரியின், புதிய மருத்துவமனையில், 'அம்மா' உணவகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்-துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கொளந்தா-னுாரில், 300 கோடி ரூபாயில், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு, கடந்த, 2019ல், அப்போதைய முதல்வர் பழனி-சாமி திறந்து வைத்தார். இதையடுத்து, பழைய மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு புதிய மருத்துவமனை கட்டடத்-துக்கு மாற்றப்பட்டனர். சித்த மருத்துவ பிரிவை தவிர, பல்வேறு மருத்துவ பிரிவுகளும், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டன.
இதனால், நாள்தோறும் வெளிப்புற நோயாளிகள், 500க்கும் மேற்பட்டோர் வரை வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு, மருத்துவமனை தரப்பில் உணவு வழங்கப்படு-கிறது. ஆனால், வெளிப்புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர் புதிய மருத்துவமனைக்கு செல்லும் போது, குறைந்த செலவில் உணவு பொருட்களை வாங்க முடி-யாமல் தவிக்கின்றனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை சுற்றியுள்ள, ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு, உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், புதிய மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.