/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி
/
பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி
பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி
பழைய மருத்துவமனை முன் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 06, 2024 01:08 AM
கரூர், : கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை முன், கழிவுநீர் பல நாட்களாக ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், நோயா-ளிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-வாங்கல் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே, பல ஆண்டுகளாக தாலுகா மற்றும் அரசு மருத்துவமனை செயல்-பட்டு வருகிறது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், கரூரில் அரசு மருத்துவ கல்லுாரி அறிவிப்பு வெளியான பிறகு, அரசு மருத்துவ மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துமனையாக மாற்றப்-பட்டது.
கடந்த, 2020 முதல் கரூர் அருகே காந்தி கிராமத்தில் புதிதாக மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, கரூர் டவுன் அரசு மருத்துவமனையில் இருந்து, சித்தா மருத்துவ பிரிவை தவிர மற்ற பிரிவுகள் அனைத்தும், புதிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்-போது, பழைய அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு, ஆயுர்-வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவுகள் செயல்படுகிறது.
இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை முன், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில், பல நாட்க-ளாக ஆறாக ஓடிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து, அந்த பகு-தியை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இதனால் மருத்துவமனைக்கு வரும், நோயாளிகள் அவதிப்படு-கின்றனர். எனவே, சாக்கடை கால்வாயில் இருந்து, வெளியேறும் கழிவுநீரை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.