/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
/
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
டூவீலர் செல்ல வழி விடுமாறு கேட்டவரை தாக்கியவர் கைது
ADDED : ஜூலை 14, 2024 03:21 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி டி.எம்.எஸ்., நகரை சேர்ந்-தவர் பாசில் உசைன், 39. இவர், பள்ளப்பட்டி தனியார் சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள சாலையை மறித்தபடி நின்றுகொண்டு, தகாத வார்த்தையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற, மண்மாரி தெற்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்-திரன், 55, டூவீலர் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாஷில் உசேன், இரும்பு ராடால் ரவிச்சந்திரனை தாக்கினார்.
இதில், காயமடைந்த ரவிச்சந்திரனை மீட்டு, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ரவிச்-சந்திரன் அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் பாஷில் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.