ADDED : ஜூன் 19, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.பரமத்தி, கரூர்
மாவட்டம், நொய்யலில் நெடுஞ்சாலை துறை சார்பில், கிராமங்களின் ஊர்
பெயர்கள் கொண்ட சிமென்ட் பலகை, பல ஆண்டுகளுக்கு முன்பு
வைக்கப்பட்டது.
தற்போது, பெயர் பலகை சேதம் அடைந்து, எந்நேரமும்
இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், புதிதாக நொய்யல் பகுதி வழியாக
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள்,
பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சேதம் அடைந்த பெயர் பலகையை
அகற்றி விட்டு, புதிதாக பெயர் பலகையை வைக்க நெடுஞ்சாலை துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.