தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

இடுபொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஆக 19, 2024 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர : கரூர், புஞ்சைத்தோட்டக்குறிச்சியில், 'அட்மா' திட்டத்தின் கீழ் கரிம இடுபொருட்கள் உற்பத்தி பற்றி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், விதைச்சான்று அலுவலர் சசிகலா, விதை உற்பத்தி செய்யும் வழிமுறைகள், விதைச்சான்று அட்-டைகள், விதைச்சான்றிதழ் நடைமுறைகள் குறித்து, விவசாயிக-ளுக்கு விளக்கி கூறினார்.

உதவி விதை அலுவலர் தங்கமுத்து, விதைப்பண்ணை அமைப்-பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வேளாண் அலுவலர் (நட-மாடும் மண் பரிசோதனை நிலையம்) ரசிகப்பிரியா, மண் மாதி-ரிகள் எடுப்பது குறித்தும், வேளாண் அலுவலர் ஸ்ரீபிரியா மண்-ணிற்கு தேவையான நுண்ணுாட்டச்சத்துக்கள் குறித்தும் பேசினர். உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார், உதவி தொழில்-நுட்ப மேலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us