நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, கொம்பாடிப்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.
வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்கப்படுகிறது. இதில் பூவன் வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.