/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடைந்த சிலாப்பை சரி செய்ய வேண்டும்
/
உடைந்த சிலாப்பை சரி செய்ய வேண்டும்
ADDED : மார் 26, 2024 11:36 AM
கரூர்: கரூர்---வெள்ளியணை சாலை தான்தோன்றி மலை பிரதான சாலையில், சாக்கடை கால்வாயின், மேல் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், சிலாப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது சிலாப் பலகை தடுப்பு உடைந்த நிலையில் உள்ளது. சாலையில் வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சாக்கடை கால்வாயில் உடைந்த நிலையில் உள்ள, சிலாப் பலகைகளை உடனடியாக மாற்றி சரி செய்ய வேண்டியது அவசியம்.
சாலையில் விளக்குகள் இல்லாததால் அவதி
கரூர்: கரூர் ஐந்து சாலையில் இருந்து, வாங்கல், நெரூர், ஒத்தக்கடை செல்லும் சாலை, பல குக்கிராமங்கள் வழியாக செல்கிறது. இரு பக்கமும் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளது. ஆனால், அந்த சாலையில் பல இடங்களில் தெரு விளக்குகள் இல்லை.
இதனால், கரூரில் இருந்து வாங்கல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் ஐந்து சாலை முதல் வாங்கல் வரை, போதிய விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

