/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை ஆக்கிரமிப்பை அகற்றாததால் தனியார் ஓட்டலுக்கு மீண்டும் நோட்டீஸ்
/
சாலை ஆக்கிரமிப்பை அகற்றாததால் தனியார் ஓட்டலுக்கு மீண்டும் நோட்டீஸ்
சாலை ஆக்கிரமிப்பை அகற்றாததால் தனியார் ஓட்டலுக்கு மீண்டும் நோட்டீஸ்
சாலை ஆக்கிரமிப்பை அகற்றாததால் தனியார் ஓட்டலுக்கு மீண்டும் நோட்டீஸ்
ADDED : மே 19, 2024 02:59 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பொத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், சாலையின் குறுக்கே இரும்பு பாலம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்த தனியார் ஓட்டலுக்கு இரண்டாவது முறையாக டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யசோதா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
பொத்தனுார் டவுன் பஞ்சாயத்து, வார்டு எண். 5, வெங்கமேடு பகுதியில் தனியார் ஓட்டல் பின்பகுதியில் உள்ள டவுன் பஞ்.,க்கு சொந்தமான சிமென்ட் சாலையில், ஓட்டலில் இருந்து வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் செல்லும் வகையில் சாலையை ஆக்கிரப்பு செய்து இரும்பு கம்பிகளை கொண்டு ஆக்கிரமிப்பு செய்து பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சிமென்ட் சாலையில் பொதுமக்கள் நடந்தும், வாகனங்களில் சென்று வர தடை ஏற்படுவதாக புகார்கள் வந்ததால், பொத்தனுார் டவுன் பஞ்சாயத்து மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற, கடந்த, 3ல் நோட்டீஸ் வழங்கி, ஏழு நாட்கள் அவகாசம் அளித்தனர். இந்நிலையில், நேற்று வரை ஆக்கிரமிப்பு எடுக்காததால் மீண்டும் இரண்டாவது முறையாக டவுன் பஞ்., செயல் அலுவலர் யசோதா, தனியார் ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அந்த நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது: பொத்தனுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான சிமென்ட் சாலையில், இரும்பு கம்பிகளை கொண்டு படிக்கட்டு அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, சாலையில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள இரும்பு கட்டுமானத்தை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்பிரிவுகள் படி முன்னறிவிப்பின்றி டவுன் பஞ்., மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு செலவின தொகையை தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும். மேலும், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

