/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிளை வாய்க்கால்களில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு
/
கிளை வாய்க்கால்களில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 01, 2024 03:46 AM
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள், குப்பைகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்டத்தில் சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப்பகுதி
யில் நெல் பயிரிட விவசாய பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கரூர்- - வாங்கல் சாலையின் குறுக்கே செல்லும் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன.
மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளன. இதனால், நீரோட்டம் தடைபட்டுள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.