/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிக லாபம் பெற தினை பயிரிட வேளாண் உதவி இயக்குனர் யோசனை
/
அதிக லாபம் பெற தினை பயிரிட வேளாண் உதவி இயக்குனர் யோசனை
அதிக லாபம் பெற தினை பயிரிட வேளாண் உதவி இயக்குனர் யோசனை
அதிக லாபம் பெற தினை பயிரிட வேளாண் உதவி இயக்குனர் யோசனை
ADDED : ஆக 03, 2024 01:31 AM
அரவக்குறிச்சி,
'அதிக லாபம் பெற, விவசாயிகள் தினை பயிரிட வேண்டும்' என, க.பரமத்தி வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆடி, புரட்டாசி மாத சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த மாதங்கள், தினை சாகுபடிக்கு ஏற்ற காலமாக உள்ளது. தினை சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடி உரமாக, 12.5 டன் மத்திய தொழு உரம், கடைசி உழவின் போது பரப்பி நிலத்தை நன்கு உழ வேண்டும். பயிர் அறுவடைக்கு பின் நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
வரிசை விதைப்பாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு, 10 கிலோ விதை தேவைப்படும். துாவுவதாக இருந்தால், ஒரு ஹெக்டேருக்கு, 12.5 கிலோ விதை தேவைப்படும். பயிருக்கு பயிர், இடைவெளியாக, 22.5 செ.மீ., 7.5 செ.மீ., இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு முறையே, 44 கிலோ தலைச்சத்து, 22 கிலோ சாம்பல் சத்து தேவைப்படும்.
இந்த பயிரில், பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன், அறுவடை செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு, க.பரமத்தி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.