/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடைந்த குடிநீர் குழாய்: சீரமைப்பு பணி நிறைவு
/
உடைந்த குடிநீர் குழாய்: சீரமைப்பு பணி நிறைவு
ADDED : மே 01, 2024 02:02 AM
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை புகழூர் பிரிவில், குழாய் மூலம் அந்த பகுதியில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. புகழூர் பிரிவில் பல மாதங்களாக, குழாய் உடைந்த நிலையில், அதில் இருந்து வெளியேறும் குடிநீர், சாலையில் ஆறாக ஓடியது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உடைந்த குழாயை சரி செய்யும் பணிக்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பள்ளம் தோண்டப்பட்டு, பல நாட்களாக, பணிகள் முடிந்த பாடில்லை. பள்ளமும் திறந்த நிலையில் இருந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வேலாயுதம்பாளையம் அருகே, புகழூர் பிரிவில் உடைந்த குடிநீர் குழாயின், சீரமைப்பு பணி விரைவாக முடிக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தற்போது, குழாய் சீரமைப்பு பணி நிறைவு பெற்று பள்ளம் மூடப்பட்டது.