ADDED : மே 04, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : க.பரமத்தி அருகே, ஜீப்பில் சிக்கிய விபத்தில், ஆண் குழந்தை உயிரிழந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அம்மன் நகரை சேர்ந்த பிரபு என்பவரது மகன் ஆதிரன், 2. நேற்று காலை பிரபு விட்டில் நிறுத்தப்பட்டிருந்த பொலீரோ ஜீப்பை, டிரைவர் ராமசாமி, 40, ரிவர்சில் எடுத்துள்ளார். அப்போது, குறுக்கே ஓடிய குழந்தை ஆதிரன் ஜீப்பில் சிக்கி உயிரிழந்தான். இதுகுறித்து, தந்தை பிரபு கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.