/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேவல் சண்டை: ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
/
சேவல் சண்டை: ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
ADDED : ஆக 06, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே, சேவல் சண்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சின்னதாராபுரம் அருகே கச்சனாம்பட்டி பகுதியில், சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவல்படி, சின்னதாராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளக்கரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மணிகண்டன், 36, என்பவரை கைது செய்தனர். அதே சமயம் ராஜபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அஜித், 31, என்பவர் தப்பி தலைமறைவானார்.