sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

/

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்


ADDED : ஜூன் 29, 2024 03:09 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டம், மேயர் கவிதா தலைமையில் நடந்தது. துணை மேயர் தாரணி சரவணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பூங்கோதை (தி.மு.க.,): வெங்கமேடு திட்டச்சாலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தாமதமாகிறது.

மாநகராட்சி அதிகாரி கார்த்திக்: கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை, விரைவாக முடிக்குமாறு கான்ட்ராக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் முடிக்கவில்லை என்றால், ஒப்பந்தம் மறுபரீசிலனை செய்யப்படும்.

சக்திவேல் (தி.மு.க.,): வார்டு நிதியாக, ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதில், கூட பணிகள் நடக்கவில்லை.

சரண்யா தேவி (தி.மு.க.,): பாரதியார் நகரில் சிறுபாலத்தில் உடைப்பு உள்ளது. சின்டெக்ஸ் தொட்டிகளில் குழாய்கள் உடைந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரி ரவி: சின்டெக்ஸ் தொட்டிகள் சில இடங்களில் மாற்றப்பட்டுள்ளது. பழைய குழாய்கள் மாற்றப்படும்.

மேயர் கவிதா: 33வது வார்டு வஞ்சுலீஸ்வரர் கோவில் பகுதியில், குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. அதை மாற்றும்படி, நானே சொல்லியுள்ளேன். வேலை நடக்கவில்லை. சிறு, சிறு பிரச்னைகளை சரி செய்யும்படி, சி.எம்., மிடமா கேட்க முடியும்.

அருள்மணி (தி.மு.க.,): ராமானுார் முதல் சுங்ககேட் முதல், குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளது.

மேயர் கவிதா: கொளந்தானுார் பகுதியில், புதிய கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளது. எதற்காக திறக்காமல் வைத்துள்ளீர்கள்.

மாநகராட்சி அதிகாரி ரவி: புதிய கழிப்பிடத்தில், பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

நிர்மலா தேவி (தி.மு.க.,): கழிவுநீர் வாய்க்காலில், சாக்கடை கழிவுகளை அகற்றுவது இல்லை.

மண்டல தலைவர் அன்பரசன்: எனது வார்டிலும், சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் அள்ளுவது இல்லை.

கமிஷனர் சுதா: ஒவ்வொரு வார்டிலும், மாஸ் கிளினிங் நடக்கிறது. அதை மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் சேர்ந்து செய்து கொள்ளலாம்.

ஸ்டீபன் பாபு (காங்.,): குடிநீர் திறந்து விடுவதில் நிறைய பிரச்னை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

யசோதா (தி.மு.க.,): எனது வார்டில், தனிநபர் ஒருவர் தன்னிச்சையாக, பைப் லைன் போட்டுள்ளார். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேயர் கவிதா: தன்னிச்சையாக பைப் லைன் போட்ட, நபர் மீது அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திராணி (தி.மு.க.,): எனது வார்டில் மூன்று போர்வெல்லும் பழுதடைந்துள்ளது.

மேயர் கவிதா: போர்வெல்கள் சரி செய்யப்படும்.

வசுமதி (தி.மு.க.,): கல்விக்குழு சம்பந்தமான தீர்மானம் உள்ளது. அதுகுறித்து, எந்த தகவலும் முன்கூட்டியே வரவில்லை.

சரஸ்வதி (தி.மு.க.,): எனது வார்டில் உள்ள, மண் சாலைகளை, தார் சாலைகளாக மாற்ற வேண்டும்.

மாநகராட்சி அதிகாரி ரவி: டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில், தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்டபாணி (மா.கம்யூ.,): துாய்மை பணியாளர்களுக்கு, அதிக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலுசாமி (தி.மு.க.,): எனது வார்டில், மூன்று மாதங்களாக குடிநீர் வரவில்லை. லாரிகள் மூலம், தண்ணீர் சப்ளையும் முழுமையாக செய்ய, அதிகாரிகளால் முடியவில்லை.

மேயர் கவிதா: மாநகராட்சியில் உள்ள தண்ணீர் சப்ளை செய்யும் வாகனங்கள், அவற்றின் நிலை குறித்து, உடனடியாக அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு, விவாதம்

நடந்தது.

முன்னதாக சாதாரண

கூட்டத்தில், 43 தீர்மானங்கள், அவரச கூட்டத்தில், 20

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us