/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே சேதம் அடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
/
கரூர் அருகே சேதம் அடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர் அருகே சேதம் அடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
கரூர் அருகே சேதம் அடைந்து வரும் சுகாதார பூங்கா: சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 16, 2024 04:03 AM
கரூர்: கரூர் அருகே பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கட்டப்பட்ட பூங்கா பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்துள்ளது.
கரூர்- வெள்ளியணை சாலை தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில், சில ஆண்டுகளுக்கு முன் சுகாதார பூங்கா அமைக்கப்பட்டது. அதில், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், வீட்டில் கழிப்பிடம் கட்ட வேண்டிய அவசியம், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும், கழிப்பிட வகைகள் குறித்த தகவல்கள் மாடல் கட்டிடங்களாக கட்டப்பட்டன.
அங்கு, பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து சென்று, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிலையில், பல மாதங்களாக சுகாதார பூங்கா பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மாடல் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. நாடு முழுவதும், துாய்மை இந்தியா என்ற பெயரில், சுகாதார திட்டத்தை மத்திய அரசு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தான்தோன்றிமலையில் சுகாதாரத்தை விளக்கி கட்டப்பட்ட, சுகாதார பூங்கா பயனற்ற நிலையில் உள்ளது. அதை சீரமைத்து, மீண்டும் பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து சென்று, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.