ADDED : மார் 29, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
அருகே, அரசு காலனியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இதனால், சில
ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல்
அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது,
சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொது மக்களால் தண்ணீர்
பிடிக்க முடியவில்லை. மேலும், போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட
நேரமாகிறது. கோடை காலம் துவங்கிய நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. இதனால், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ்
தொட்டி வைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

