sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எல்., சார்பில் மஞ்சப்பை வழங்கல்

/

டி.என்.பி.எல்., சார்பில் மஞ்சப்பை வழங்கல்

டி.என்.பி.எல்., சார்பில் மஞ்சப்பை வழங்கல்

டி.என்.பி.எல்., சார்பில் மஞ்சப்பை வழங்கல்


ADDED : ஆக 27, 2024 03:00 AM

Google News

ADDED : ஆக 27, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர: கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட, வேலாயுதம்பாளையம் வாரச்சந்தையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

காகித ஆலை நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். பிளாஸ்டிக் பை மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகிறது. இதன் பயன்பாட்டால், கடல் வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழல் அமைப்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும், 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.பிளஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றான துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 70 ஆயிரம் ரூபாய்- மதிப்புடைய, 2,500 மஞ்சள் நிற கட்டை பைகள், காகித ஆலை நிறுவனம் சார்பில், புகழூர் நகராட்சிக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us