sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 14, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர், ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். இதில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் அரசாணையை அனுமதிக்காமல், சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை கட்டணத்தில், 20 முதல், 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதித்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியத்தில் தாமதமாகவே மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறைப்படி வருமான வரி செலுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us