/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 11, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மாவட்ட எல்.பி.எப்., செயலாளர் அப்பாசாமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மூன்று புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச ஊதியம், 25 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிசாமி, வடிவேலன், சுடர்வளவன், ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

