/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அருகே மாலை தாண்டும் விழா
/
குளித்தலை அருகே மாலை தாண்டும் விழா
ADDED : ஆக 06, 2024 02:24 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை பஞ்., கீழவாலியம்பட்டியில் தாத்தையா சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த, 19 ஆண்டுகளாக கோவிலில் திருவிழா நடத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊர்முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் விழா நடத்துவதற்கு முடிவு செய்து, இந்தாண்டிற்கான திருவிழா கடந்த, 21ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்
பகுதி பக்தர்கள் எட்டு நாள் விரதம் இருந்து, தாத்தையா சுவாமிக்கு தினமும் மூன்று கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை எருது குட்டை சுவாமிக்கு எருது விடுதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் முன்பாக அனைத்து சலை எருது மாடுகளுக்கு, புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு, மந்தை எதிரே 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபி ேஷகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புண்ணிய தீர்த்தம் தெளித்து. மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கிருந்து, 500க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது.
பின்னர் , மஞ்சள் பொடி வைத்திருந்த மூன்று கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன், மணமேடு சீலா நாயக்கர் தாத்தையா சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.