/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
/
மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு
ADDED : செப் 07, 2024 07:20 AM
கரூர்: கரூர் மாநகராட்சி, நகர்நல அலுவலர் பெயரில், போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரியை சேர்ந்தவர் லட்சியவர்ணா, 42; இவர், கரூர் மாநக-ராட்சியில் நகர்நல அலுவலராக கடந்த, மூன்றாண்டுகளாக பணி-யாற்றி வருகிறார். இந்நிலையில், லட்சிய வர்ணா பெயரில், வட-மாநிலத்தை சேர்ந்தவர், போலியான பேஸ் புக் கணக்கை தொடங்கியுள்ளார்.
அதன்மூலம், லட்சிய வர்ணாவின் பேஸ்புக் நண்பர்களை தொடர்பு கொண்டு, பேஸ் புக் மூலம் பணம் கேட்டு, வட மாநி-லத்தை சேர்ந்தவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா, கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.