sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

/

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி


ADDED : ஜூலை 21, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;க.பரமத்தி அருகே ஆத்துப்பாளையம் அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், அணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கழிவுநீர் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019ல் மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது. இதனால், அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதேபோல் கடந்த, நான்கு ஆண்டுகளாக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக, இரண்டு அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து இல்லாததால், ஆத்துப்பாளையம் அணையின் நொய்யல் வாய்க்கால் பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us