/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
/
ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
ADDED : ஜூலை 19, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: சேங்கல் பஞ்சாயத்து மாணிக்கபுரம் பகுதியில், ஏராளமான விவ-சாயிகள் உள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்-சப்படுகிறது. விவசாய தோட்டங்களில் மின்மோட்டர்களுக்கு, மின் வினியோகம் தரும் மின்கம்பம் பல இடங்களில் சிதலம-டைந்து மிகவும் மோசமாக உள்ளது.
கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் விவ-சாயிகள் கிணறுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, அச்சுத்-துடன் காணப்படுகின்றனர். மேலும் மின்கம்பம் கிழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுவதற்கான நடவடிக்கையை மின்-சாரம் வாரியம் எடுக்க வேண்டும்.