/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலாயுதம்பாளையம் அருகே குடிசை வீட்டில் தீ
/
வேலாயுதம்பாளையம் அருகே குடிசை வீட்டில் தீ
ADDED : ஆக 06, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, நேற்று குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே, கிடைக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிவேல், 55, கூலி தொழிலாளி. இவரது குடிசை வீட்டில், நேற்றும் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, மணிவேல் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர்.
தகவல் அறிந்த மணிவேல், புகழூர் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். ஆனால், வீட்டில் இருந்த உணவு பொருட்கள், துணிகள், பாத்திரங்கள் தீயில் நாசமாயின. தீ விபத்து குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.