sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்

/

நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்

நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்

நெடுஞ்சாலையில் விபத்து காரில் வந்த ஐவர் காயம்


ADDED : ஜூன் 25, 2024 02:12 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனுார் பாலப்பட்டியை சேர்ந்தவர் கபிலன், 21. இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது காரில் இதே ஊரை சேர்ந்த சுப்ரமணி, 74, சிவகுமார், 45, மதிவதனன், 70, திருமூர்த்தி, 47, ஆகிய நான்கு பேருடன் கரூர் - திண்டுக்கல் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, எதிர் திசையில் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த தண்ட

பாணி, 45, என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு கார், அதே நேரத்தில் இச்சிப்பட்டியை சேர்ந்த நல்லசாமி, 73, என்பவர் ஒட்டி வந்த டூவீலர் மீது மோதி, நிலை தடுமாறி கபிலன் ஓட்டிய கார் மீது மோதியது. அடுத்தடுத்த ஏற்பட்ட விபத்தில், கபிலன் காரில் பயணித்த ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரும், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us