sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்

/

கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்

கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்

கரூர்-மதுரை சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பையால் தொற்று நோய் அபாயத்தில் மக்கள்


ADDED : ஆக 08, 2024 01:48 AM

Google News

ADDED : ஆக 08, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர்--மதுரை சர்வீஸ் சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை, சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை சாலையில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், கரூரில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை சர்வீஸ் சாலையில் உள்ள குப்பை கழிவு கள் நனைந்து அழுகும் நிலை யில் உள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின், சர்வீஸ் சாலையில், சின்ன ஆண்டாங்கோவில் பிரிவில், அதிகளவில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு, கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us