/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மசால் வடையில் எலி சாப்பிட்டவருக்கு கிலி
/
மசால் வடையில் எலி சாப்பிட்டவருக்கு கிலி
ADDED : ஆக 31, 2024 12:33 AM

குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை, வைகை நல்லுார் அக்ரஹாரம் பிரிவு சாலையில் பாபு என்பவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை நடத்துகிறார்.
குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, 33, நேற்று மதியம் டீ கடையில் மசால் வடை வாங்கினார். வடையில் பாதி சாப்பிட்டு விட்டு பார்த்தபோது, அதில் எலி இறந்து கிடந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது, 'அது ஒன்றும் செய்யாது, சிறிய எலி தான்' என்றார்.
இதுகுறித்து, சமூக வலைதளங்களில் படம் வைரலானது.
குளித்தலை எஸ்.ஐ., பிரபாகரன் டீக்கடையில் விசாரணை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.
பின், நகராட்சி பணியாளர்கள் அந்த கடையின் தின்பண்டங்களை கைப்பற்றி, நகராட்சி அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.
பாதிக்கப்பட்ட கார்த்திக், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரமத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் டீ கடையில் சோதனையிட்டு, கடைக்கு 'சீல்' வைத்தார்.