/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டல் மாஸ்டர் மாயம்: போலீசில் தாய் புகார்
/
ஓட்டல் மாஸ்டர் மாயம்: போலீசில் தாய் புகார்
ADDED : மே 11, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே, ஓட்டல் மாஸ்டரை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வெண்ணைமலை லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 41; ஓட்டல் மாஸ்டர். இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக கடந்த, ஐந்து மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த, 8 ல் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் மணிமொழி, 61; போலீசில் புகார் செய்தாார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.