/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் சுக்காலியூர் பகுதியில் சோளம் சாகுபடியில் தீவிரம்
/
கரூர் சுக்காலியூர் பகுதியில் சோளம் சாகுபடியில் தீவிரம்
கரூர் சுக்காலியூர் பகுதியில் சோளம் சாகுபடியில் தீவிரம்
கரூர் சுக்காலியூர் பகுதியில் சோளம் சாகுபடியில் தீவிரம்
ADDED : மே 30, 2024 01:07 AM
கரூர், சுக்காலியூர் பகுதியில், அதிகளவு சோளப்பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம் வழியாக அமராவதி ஆறு மாநகரின் வழியாக திருமுக்கூடலுார் நோக்கி செல்கிறது. அமராவதி ஆற்றுப்பாசன பகுதியில் நெல், கரும்பு, பருத்தி, மரவள்ளிக்கிழங்கு போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி என இரண்டு ஆறுகள் பயணித்தாலும், சுக்காலியூர் போன்ற பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலமும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சுக்காலியூர் பகுதியை சுற்றிலும், 100 ஏக்கரில் சோளப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பிரதான சாகுபடியாக சோளப்பயிர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை மழை பெய்து வருவதால், விவசாயிகளும் ஆர்வத்துடன் சோளப் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர்.