sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சித்தலவாய் ரயில் நிலையம் குறித்து கரூர் எம்.பி., நேரில் கள ஆய்வு பணி

/

சித்தலவாய் ரயில் நிலையம் குறித்து கரூர் எம்.பி., நேரில் கள ஆய்வு பணி

சித்தலவாய் ரயில் நிலையம் குறித்து கரூர் எம்.பி., நேரில் கள ஆய்வு பணி

சித்தலவாய் ரயில் நிலையம் குறித்து கரூர் எம்.பி., நேரில் கள ஆய்வு பணி


ADDED : நவ 09, 2024 01:32 AM

Google News

ADDED : நவ 09, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், நவ. 9-

சித்தலவாய் ரயில் நிலையம் செயல்பாடு குறித்து, கரூர் எம்.பி.,ஜோதிமணி நேரில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அருகில், சித்தலவாய் என்ற பெயரில் மிகவும் பழமையான ரயில் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து, பயணிகள் சென்று வரும் நிலையில், தற்போது ரயில் நிலையம் மூடப்படுவதாக தகவல் வந்ததன் அடிப்படையில், நேற்று கரூர் எம்.பி., ஜோதிமணி கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்த்தார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சித்தலவாய் ரயில் நிலையம், 100 ஆண்டுகளாக பழமையானது. இங்கு முன்பதிவு மையம் செயல்படுகிறது. மாதம்தோறும், 1,300க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளுக்கு சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக, எட்டு லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்காக ரயில்வே துறை அமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் வரும். அதன்படி ரயில்நிலையம் மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக, ரயில் நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்காக, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் பணிகளையும் பார்வையிட்டார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, வார்டு கவுன்சிலர் ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us