/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
/
சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED : ஆக 17, 2024 04:14 AM
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்-கிழமையை முன்னிட்டு, நாத உற்சவம் மற்றும் விளக்கு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்ம-னுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. அம்-மனுக்கு வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்-டது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திரு
விளக்கு பூஜை நடத்தப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்-டனர். தொடர்ந்து நாத உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. 60க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள், பல்வேறு ராகங்-களில் நாதஸ்வரம் வாசித்தனர். சிறப்பாளராக ஓய்வு பெற்ற நீதி-பதி கற்பக வினாயகம் கலந்து கொண்டார்.

