ADDED : ஆக 23, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். தரமிரக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை தரம் உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும்.
நில அளவை பதிவேடு துறையில், களப்பணியாளர்களின் நிலுவை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத் தலைவர் மோகன் ராஜ், மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.