sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலுக்குவருகை தந்த மந்த்ராலய பீடாதிபதி

/

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலுக்குவருகை தந்த மந்த்ராலய பீடாதிபதி

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலுக்குவருகை தந்த மந்த்ராலய பீடாதிபதி

சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலுக்குவருகை தந்த மந்த்ராலய பீடாதிபதி


ADDED : ஜூலை 03, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர், ராகவேந்திரர் கோவில், சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவிலுக்கு, மந்த்ராலய பீடாதிபதி நேற்று வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் உள்ளது. ஆயிரக்கணக்கான மத்வா சமூகத்தினரின், குல தெய்வமாக கருதப்படுகிறார். கருவறைக்குள் கோபால கிருஷ்ணரின் சிலையும் உள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப் படுகிறது.கருவறைக்கு இடதுபுறம் மத்வாச்சாரியார் சன்னதி உள்ளது. சிலை வியாசராஜரால் நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.இந்த கோவிலுக்கு, மந்த்ராலய பீடாதிபதி சுபதீந்தர தீர்த்த சுவாமிகள் நேற்று விஜயம் செய்தார். யோகநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்தார்.பின், பக்தர்களுக்கு அருளாசியுடன், மந்த்ராலய பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் பிரசன்னா, அறங்காவலர்கள் ஜெயநரசிம்மன், குப்புராவ், நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.பின், கரூர் ராகவேந்திரர் கோவிலுக்கும் வருகை தந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.






      Dinamalar
      Follow us