sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா

/

மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா

மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா

மின்வாரிய பென்ஷனர் சங்க 5ம் ஆண்டு துவக்க விழா


ADDED : ஜூலை 07, 2024 02:48 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை வைகைநல்லுார் அக்ரஹாரத்தில், மின்வாரிய பென்ஷனர் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, பேரவை கூட்டம் நடந்தது.

சங்க கொடியை தணிக்கையாளர் பழனியாண்டி ஏற்றினார். சங்க தலைவர் பால பொன்னம்பலம் விழா ஒருங்கிணைப்பு செய்தார். துணைத் தலைவர் பழனிவேலு தலைமை வைத்தார். ஆண்டு அறிக்கையை துணை செயலாளர் கண்ணன் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் மகாலிங்க வாசித்தார்.

மாநில தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் முத்துக்குமார், திருச்சி மண்டல தலைவர் எஸ்மா ராமசாமி, குளித்தலை வட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழக அரசு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில், மத்திய அரசின் அறிவிப்புக்கேற்ப ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் பஞ்சப்படி உயர்வை தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து நிலுவைகள் ஏதுமின்றி தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் உரிய கமிட்டி அமைத்து விரைவாக கமிஷனரின் பரிந்துரைகளை பெற்று 2026 முதல் பென்ஷன் உயர்வை அமல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலாளர் நரசிங்கம் நன்றி கூறினார்.

செயற்குழு, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us