/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்நடைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
கால்நடைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஆக 09, 2024 02:57 AM
கரூர்: சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை-களை வளர்த்து வருபவர்களில் சிலர், அவற்றை தங்களது வீடு-களில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். கால்ந-டைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். தவிர, சாலைகளில் திரியும் ஆடுகள், இப்பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகளும் தொந்தரவுக்கு உள்-ளாகின்றனர்.
எனவே, கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையா-ளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்