ADDED : ஜூலை 29, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில், உழவர் சந்தை அருகே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்காத, தி.மு.க., அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கைவிடக்கோரியும், கரூர் பஸ் ஸ்டாண்டை விரைவாக, புனரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில மகளிரணி அமைப்பாளர் காளி-யம்மாள் உள்பட, நா.த.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, தி.மு.க., அரசை கண்டித்து, பொதுக்கூட்டம் நடந்தது.