/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண் புழு உரம் உற்பத்தி குறித்த ஒரு நாள் பயிற்சி
/
மண் புழு உரம் உற்பத்தி குறித்த ஒரு நாள் பயிற்சி
ADDED : ஆக 06, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ், மண்புழு உரம் உற்பத்தி குறித்த, ஒரு நாள் பயிற்சி முகாம் ஒத்தையூரில் நடந்தது.
அதில், மண் மாதிரிகள் எடுக்கும் முறைகள், மண்ணுக்கு தேவையான நுண்ணுட்ட சத்துக்கள், மண்புழு உரம் உற்பத்தி உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாமில், வேளாண்மை அலுவலர்கள் ரசிக பிரியா, மணிமேகலை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் மாரிமுத்து, உதவி மேலாளர் சுரேஷ், ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் மதன கோபால் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.