/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சாலையால் மக்கள் கடும் அவஸ்தை
/
மோசமான சாலையால் மக்கள் கடும் அவஸ்தை
ADDED : செப் 03, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம், பிடாரி அம்மன் கோவில் சாலை மோசமாக இருப்பதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த சாலை வழியாக விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்கின்றனர். கோவில் சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருப்பதால், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாயிகள் வெற்றிலை மூட்டைகளை எடுத்து, வாக-னங்களில் கொண்டு செல்லும் போது கஷ்டப்பட்டு செல்கின்-றனர். எனவே, மோசமான சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.