/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ
/
சிறுமிக்கு 'தொல்லை' 3 பேர் மீது போக்சோ
ADDED : ஆக 14, 2024 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ சட்டத்தில், மூன்று பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் அருகே, வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன், 39; இவர், அதே பகுதியை சேர்ந்த, 12 வயதுடைய, ஏழாம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், சிறுமியின் தாய், பாட்டி ஆகியோரும், சபரிநாதனுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து, சிறுமி அளித்த புகார்படி, சபரிநாதன், தாய் மற்றும் பாட்டி மீது கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.