/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோழி வளர்ப்பு இலவச பயிற்சி கரூரில் நாளை தொடக்கம்
/
கோழி வளர்ப்பு இலவச பயிற்சி கரூரில் நாளை தொடக்கம்
ADDED : ஆக 18, 2024 03:08 AM
கரூர்: கரூர் அருகே, புறக்கடை கோழி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் வரும், நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்-கலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள, தமிழ்நாடு கால்-நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை முதல் வரும், 24 வரை புறக்கடை கோழி வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில், 18 வயது முதல், 40 வயதுள்ள, குறைந்தது, ஐந்தாம் வகுப்பு வரை படித்த, கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்-கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

