sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் :ரூ.16.08 கோடி மானியம் வழங்கல்

/

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் :ரூ.16.08 கோடி மானியம் வழங்கல்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் :ரூ.16.08 கோடி மானியம் வழங்கல்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் :ரூ.16.08 கோடி மானியம் வழங்கல்


ADDED : ஆக 14, 2024 02:30 AM

Google News

ADDED : ஆக 14, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தில், 16.08 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட்ஸ் திட்டத்தில், 33 இளைஞர்களுக்கு, 24.51 கோடி ரூபாய் கடன் உதவி, 6.12 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 122 பேருக்கு, 5.69 கோடி ரூபாய் கடன் உதவி, 1.42 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 773 பேருக்கு, 39.84 கோடி மதிப்பிலான கடன் உதவி, 16.08 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி திட்டத்தில், 39 நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக, 7.91 கோடி ரூபாய், மின் மானியமாக, 57 நிறுவனங்களுக்கு, 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 3 ஆண்டுகளில் மாவட்ட தொழில்மையத்தின் மூலம், 594 தொழில் முனைவோர்களுக்கு, 89 கோடி ரூபாய் கடன் உதவி, 23.18 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us