/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே நாளை காடை வளர்ப்பு பயிற்சி முகாம்
/
கரூர் அருகே நாளை காடை வளர்ப்பு பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 07, 2024 02:52 AM
கரூர்:கரூர் அருகே, பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை, (8 ல்) ஜப்பானிய காடை வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சியில், விவசாயிகள், கோழிப்பண்ணையாளர்கள், காடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு, காடை வளர்ப்பு தொடர்பாக, சந்தேகங்களுக்கு பதில் பெறலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 04324-294335, 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் நாளை காலை, 10:30 மணிக்கு பயிற்சி மைய வளாகத்துக்கு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.