sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு

/

குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு

குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு

குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீட்பு


ADDED : ஆக 07, 2024 02:06 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை, கடை வீதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக, 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் பாதுகாப்பு இல்லாமலும், அரைகுறை ஆடைகளுடனும் சுற்றி வந்தார். அவரை சாந்திவனத்தில் அனுமதித்து மனநல சிகிச்சையளித்து உதவிட வேண்டுமென சமுக ஆர்வலர் பாரதி, சாந்திவனம் மனநல காப்பகத்தின் இயக்குனர் அரசப்பனை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார். குளித்தலை போலீசாரின் உரிய அனுமதியுடன், நேற்று மதியம் சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் மருதாம்பாள் மற்றும் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்புக் குழுவினர், மனநலம் பாதித்த நபரை மீட்டு, திருச்சி, தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இங்கு சிகிச்சை முடிந்ததும், அவர் தொடர் மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளுக்காக சாந்திவனம் - மனநலம் காப்பகத்திற்கு மாற்றப்படுவார். அங்கு குணம் பெற்றவுடன், முகவரி கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார்.






      Dinamalar
      Follow us