/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் அரளி பூ செடிகளை சீரமைக்க கோரிக்கை
/
நெடுஞ்சாலையில் அரளி பூ செடிகளை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 15, 2024 02:40 AM
கரூர்: கரூர் -- -சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையின் நடுப்-பகுதியில் வளர்ந்துள்ள, அரளி பூ உள்ளிட்ட செடிகளால், அடிக்-கடி விபத்துகள் ஏற்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியும் வகையில் செடிகளை சீரமைக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் -- சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்-றன. நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில், நடப்பட்ட அரளி பூ உள்-ளிட்ட, பல்வேறு செடிகள் உயரமாக வளர்ந்துள்ளது. இதனால், நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல், வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.குறிப்பாக, சாலையில் வளர்ந்துள்ள செடிகளை சாப்பிட ஆடு, மாடுகள் அதிகளவில் வருகிறது. அப்போது திடீரென அவை குறுக்கே ஓடுவதால், வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. காலை, மாலை நேரங்களில் நெடுஞ்சா-லையின் நடுப்பகுதியில் உள்ள அரளி பூக்களை சிலர் பறிக்க வரு-கின்றனர். அப்போது, வாகனங்களில் சிக்கி பூ பறிக்க வரு-வோரும் காயமடைகின்றனர்.
இந்நிலையில், கரூர்--சேலம் மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சா-லையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில், செடிகள் எதுவும் இல்லாத நிலையில், எதிரே வரும் வாகனங்கள் தெள்ள தெளிவாக தெரியும் வகையில் உள்ளது. எனவே, கரூர்--சேலம் மற்றும் மதுரை நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் உள்ள, அரளி பூ உள்ளிட்ட செடிகளின் அளவை சிறிது குறைக்க, நெடுஞ்-சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ-சியம்.