/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடையூறு டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை
/
இடையூறு டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : ஆக 18, 2024 03:18 AM
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை எதிரே, திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்து ஏற்-பட்டு வந்தது. அதனால் இந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றய-மைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நேற்று காலை, 9:00 மணிக்கு, மின் வாரிய பணி-யாளர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி, மின்சாரத்தை துண்டித்-தனர். தொடர்ந்து, டி.இ., தனபால் தலைமையில் ஏ.டி., பால-குமார், உதவி பொறியாளர் நடராஜன் முன்னிலையில், 15க்கு மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் டிரான்ஸ்பார்மரை மாற்றிய-மைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின், மாலை, 6:00 மணிக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. இதனால், வணிகர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

