ADDED : ஏப் 17, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
அருகே நெரூர் சாலையில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே,
காவிரியாற்றின் கிளை வாய்க் கால் செல்கிறது.
வாய்க்கால் மேல் உள்ள
பாலத்தின், இருபக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. சில
மாதங்களுக்கு முன்பு தடுப்பு சுவர் இடிந்து விட்டது. புதிதாக தடுப்பு
சுவர் கட்டப்படவில்லை. இதனால், அந்த வழியாக இரவு நேரத்தில்
டூவீலர்களில் செல்லும், பொதுமக்கள் தவறி வாய்க்காலில் விழுகின்றனர்.
எனவே, வாய்க்கால் மேல் பகுதியில் உள்ள, பாலத்தின் இருபக்கமும் தடுப்பு
சுவர் கட்ட, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

