ADDED : ஆக 19, 2024 03:19 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி டவுன்
பஞ்.,க்குட்பட்ட, 3வது வார்டில், ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே, வடக்கு தெரு
பகுதி அமைந்துள்-ளது. போக்குவரத்து நெரிசலான கரூர் சாலையில் அமைந்துள்ள
இப்பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்-டப்பட்டது.
தற்போது கன மழை பெய்தால், சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, கரூர்
சாலை முழுதும் ஆக்கிர-மித்து விடுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே
கழிவுநீர் தேங்கி-யுள்ளதால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அலுவலர்கள்
சிரமப்பட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள்
கூறுகையில், 'இந்த சாலை வழியா-கத்தான், வார்டு கவுன்சிலர் காந்திமேரி
தினந்தோறும் சென்று வருகிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்க-வில்லை. மேலும், கழிவுநீர் தேங்கிய பகுதியில், கொசு மருந்து கூட
தெளிக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொது-மக்களுக்கு, நோய்
தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது' என்-றனர்.