/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
/
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2024 01:31 AM
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா
பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு
கரூர், ஆக. 21-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை சாலையில் சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர்- கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவு உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தாராபுரம், பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. இதனால், சின்னதாராபுரம் பிரிவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பெரும் பாலும் போலீசார், சின்னதாராபுரம் பிரிவில் பணியில் இருப்பது இல்லை. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், கோவை சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து, சின்னதாராபுரம் பிரிவு பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'கோவை சாலை சின்னதாராபுரம் பிரிவு பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து ,பொதுமக்கள் சின்னதாரா புரம் பிரிவு வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அப்போது, கோவை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்' என்றனர்.

