/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.25 லட்சம் மோசடி: தம்பதியர் மீது வழக்கு
/
ரூ.25 லட்சம் மோசடி: தம்பதியர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 01:10 AM
குளித்தலை, : குளித்தலையில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை, பெரியார் நகரை சேர்ந்தவர் நிவேதன், 31. அதே பகு-தியை சேர்ந்த மண்கண்டன், மணிமேனன் இன்போடெக் நிறுவ-னத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி கமலாதே-வியும், தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர்
தமிழ்நாடு அரசிடமிருந்து, எர்த் ஒர்க் கான்ட்ராக்ட் வாங்கி தருவ-தாக, நிவேதனிடம் தம்பதியர் ஆசை வார்த்தை கூறி, 2021 ஆக., 1ல், 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, கான்ட்ராக்ட் வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்-தனர்.
பலமுறை கேட்டும் பணம் தராததால், நிவேதன் கொடுத்த புகார்-படி, மணிகண்டன், அவரது மனைவி லட்சுமி கமலாதேவி ஆகியோர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.