/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்
/
கரூர் - கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்
ADDED : ஜூலை 04, 2024 03:07 AM
கரூர்: கரூர்-கோவை சாலை மின்வாரிய அலுவலகம் அருகே, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யக்கோரி அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் அலட்சியம் காட்டியது.
இந்நிலையில், பல நாட்களாக, கரூர்- கோவை சாலை மின் வாரிய அலுவலகம் அருகே, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறி, சேலம் சாலையில் ஆறாக ஓடியது. சாக்கடை கழிவால் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியினர், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.